Wednesday 22 February 2012


Posted: 16 Feb 2012 11:39 PM PST
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUWXhFn-1raUMI48EXCAcfFH78PJvjNx4HYIfmfzPJSVDdc7Ov_5drWbQ3kk3TOM4rpIRrbWxMaN0I3mdCYA75wnmaQVU2Ywx909WyS6wd8ZmbydVdAowttkZah8tKPF4MkW3Jd0cqnmBD/s320/2011-03-01+14.03.11.jpg


சுவையான பிஷ் பிரியாணி சுவைக்க வாருங்கள்https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkFnkGkCkxfaKbJcT6h7r6yi2QkKjWaT-fnwG5zukmxkuro0-0WhK7zEnHF7vwe718RadYnj1bJeo8XQIFXHSMU_vswQ0AyIrpV4zfZvy5j-JghKUZAFXYFMyBHUWlD3_6sim-EyYuK1nF/s320/2011-03-01+10.18.56.jpg


தேவையான பொருட்கள் 

வஞ்சர மீன் - 1 கிலோ 
பாஸ்மதி அரிசி - 3/4கிலோ 
வெங்காயம் - 5 
தக்காளி - 4 
பச்சைமிளகாய்- 4 
கொத்தமல்லி - 1கட்டு 
புதினா - 1 கட்டு 
இஞ்சி பூண்டு விழுது - 3ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 3ஸ்பூன் 
மல்லித்தூள் - 1ஸ்பூன் 
கலர் பவுடர் - சிறிது 
உப்பு - தேவையான அளவு 

மீனில் தடவும் மசாலா : 

மல்லி தூள் - 2ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன் 
இஞ்சி, பூண்டு விழுது - 2ஸ்பூன் 
எண்ணெய் - 3ஸ்பூன் 
உப்பு - சிறிது 

தாளிக்க 
நெய் - தேவைக்கு 
எண்ணெய் - தேவைக்கு 
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 3 
பிரிஜ்ஜி இலை - 1 

செய்முறை:வெங்காயம் , தக்காளி, பச்சமிளகாய் நீளவாக்கில் நறுக்கவும். மீனன சுத்தம் செய்து தனியாக வைக்கவும். 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv8lWMPvNYzd5m_Eym4nv9mBOiMEGLKj9XL7qzvRtUR6C9DDn1B469u5y6mKYNRDziujet91OlgnOIQxOHk1SctfyEolnEqJKh6Jy6Cj2MrVbkIcOjzTF5pt8FBBtRKRY3LFWaYXoe0Mz3/s320/2011-03-01+11.02.31.jpg

சுத்தம் செய்த மீனில் மீன் மசாலாவை தடவி 1/2 மணி நேரம் பிரிஜில் வைக்கவும் 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGe6xywuRxFXTgTicthlm76P2E0RrDR1vrrVnk8gUDdduQb8hoLhAejltlJDvo8XQ3TPxpqgbzB2W9EUmVySm5TRz2vJ8QsgGODGcx_hheGzmmTLQjgs2NEtxdlI2RRsi0Bbx6EjtBz828/s320/2011-03-01+12.48.18.jpg


மீனை தோசைக்கல்லில் ஃப்ரை பண்ணி எடுத்து தனியாக வைக்கவும். பொறித்த மீனின் தோலை எடுத்துவிடவும் கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சிறுது வெங்காயத்தை ஃப்ரை பண்ணி தனியாக வைக்கவும் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ1Kh6tbqbZYtFf3VwVUg4hA4RoHabklHfT-czzk38Zdg1DLish2aBrFLpgTbvDDk-qt_ymeY0jH1E0TtJOUEEk3aNlHk1EIBC-dNOiEQRotZTBYXddBhmEGtIiDT0sBuLw7iOk4Du8g71/s320/2011-03-01+11.27.47.jpg


ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ப்ரிஜ்ஜி இலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். . வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கொத்தமல்லி, புதினா போட்டு கிளறி விட்டு மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சிறிது போட்டு கிளறவும் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPWgbgyXhIClTr11cZ9yd9_5DYWcsf1YKHFE3Smgknn5PDUsK7K0hzASmLI3mR2ELxHrSUB0k1GKufchd8qsLeGYX5loAru9Fo69M_CBYuH5O5W1AX52b09acohpoONZ2vvn168NihW1W_/s320/2011-03-01+13.02.11.jpg

பாஸ்மதி அரிசியினை 20 நிமிடம் ஊற வைத்து 3/4 பாகம் வேக வைத்து சாததை வடித்து தனியாக வைக்கவும் தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இதில் கிரேவியினை போட்டு கிளறி வைக்கவும் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuq3I4a8XH4bCXj-qvz9yfL6eGm46l5-L2u8wo3X7Q2cmOfShSf-zmsUERlX8VCR1TdOJ4YwtZL4Z2H0R9xKNTQxrDd-1pCa_OmxodADlr70tF43z6jKApt0qVVQ4oYTfvYQFmjkqmzimi/s320/2011-03-01+13.15.20.jpg

வேறு ஒரு அடி கணமான பாத்திரத்தில் சிறுது எண்ணெய் ஊற்றி அதன் மீது பொறித்த வெங்காயம் பாதி தூவி அதன் மேல் கிரேவி கலந்த சாதம் போடவும் .அதன் மேல் ஃப்ரை பண்ணிய மீனை வைக்கவும். அதன் மேல் சாதம் போட்டு மெல்ல அழுத்தி விடவும் மேலே பொறித்த மீதி வெங்காயம் தூவவும். எலுமிச்சை பழம் பிழிந்து விடவும். அதன் மீது சிறுது தண்ணீரில் கலந்த கலரை சுற்றி வரை ஊற்றவும் . இருக்கமான மூடி போட்டு 10 நிமிடம் ஹையிலும், 15 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-v3CT2c9E7wxFIlAMdXvl6R6BmSYZRskJsZAyzu7fOxIBnvOWobcwqlUtBLVZ7hKq6_xoyA-cxKqAsiJLaK6JDrZdpWW_4QkHFFwXXUngR6ewb4LQmbdWJZkqTwgdeuCdq2zEZiOuA-KB/s320/2011-03-01+14.03.11.jpg

சூடான சுவையான ஃப்ரை ஃபிஷ் பிரியாணி தயார். இந்த பிரியாணி செய்ய கொஞ்சம் வேலை அதிகமாக தான் இருக்கும் இதன் சுவையும் அதிகமாக தான் இருக்கும் 


என்றும் நட்புடன் உங்கள் 

http://signatures.mylivesignature.com/54488/247/3407A55F8FBB429187741A4CA6F46FEB.png


மாமியார் மெச்சும் மருமகளாக!
11TH FEBRUARY, 2012
digg
உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்கஎன கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் மேரிடல் கவுன்சிலிங்வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வதேசப் பிரச்சினை இது!
அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத் துவங்கும்.
தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையோ என அம்மா கவலைப்பட ஆரம்பிக்கும் முதல் புள்ளி பல சிக்கல்களின் ஆரம்பம். அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் ஒரு ஆலோசகர்.
அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே!
அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.
மனைவியா? அம்மாவா? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்என ஆண் குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் அவரோட மனைவிக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.
சிக்கலில் மிக நுட்பமான பகுதி!
இந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் சொல்கிறேன். உங்க கணவன் அவரோட அம்மா கிட்டே ரொம்ப நெருங்கக் கூடாதா? ஒரு சின்ன வழி, நீங்க அவரோட அம்மா கிட்டே அதிகமா நெருங்கறது தான். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாம். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் நெருங்கும் காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கு மிகப்பெரிய சுகம்.
வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!
வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
முதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை !. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.
மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்!
யோசித்துப் பாருங்களேன். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசியிருப்பீங்க. முக்கால் வாசி பேரோட வாழ்நாள்லயே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சொல்லுங்களேன்”. சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாதுங்கறது முக்கியம்.
மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்!
உங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவங்க. அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்காங்க. அவங்க வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்க கிட்டே தந்திருக்காங்க. அதை மதிங்க. யாருக்கு அதிகம் உரிமைங்கறதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவைன்னு தலை கிட்டே போனா என்ன முடிவு கிடைக்கும்? எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.
உங்க மாமியாரோட ரொம்ப நேரம் செலவிடுங்க. உங்க அம்மாகூட இருக்கும்போது எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்க ? அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்க. வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசறதுக்கும் கேட்கறதுக்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையா நீங்க இருங்களேன் !
உங்க பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறாங்களா ? ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ? டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போ புரிஞ்சுப்பீங்க. அதனால அந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகா பிரச்சினைகள் போல எடுத்து பேசாதீங்க. அவர்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்க.
புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்!
உங்க வீட்ல இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லயும் இருக்க முயற்சி பண்ணுங்க. அது ரொம்பவே பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர டைம் வேணும். அவசரப் படக் கூடாது. ஒட்டலையே என வெட்டிவிட்டால் சர்வமும் நாச மயம் !
அம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலை ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொரு புறம் இருக்கலாம். இது மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.
மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல!
மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம். சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம். தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம்.
மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்!
சரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள்? தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க ? கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது ?
மகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான்!
குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்!
அடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. அவர்களுடைய பழக்கம் அவர்களுக்குஎன எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்ன்னு மாமியார் சொன்னா, “ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதான்னு எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா உங்க ஆளுங்க கிட்டே பேசும்போது மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோன்னு நக்கல் அடிக்காதீங்க.
சுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.
நன்றி: நீடூர்.இன்போ


சிறுநீரகத் தொற்று... காரணங்களும், தீர்வுகளும்
மாற்றம் செய்த நேரம்:2/9/2012 12:11:48 PMhttp://www.dinakaran.com/Healthnew/H_image/ht1205.jpg
12:11:48
Thursday
2012-02-09
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயசு பேதம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படுகிற சிறுநீரகத் தொற்று. சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரிச்சல், ரத்தக் கசிவு என இது கொடுக்கும் இம்சைகள் எக்கச்சக்கம். சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள், தீர்வுகள், சிகிச்சைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் என். ஆனந்தன்.

சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியா, சிறுநீர் பையில் சேர்ந்து பிறகு வெளியேறும். இந்தப் பாதைல பொதுவா பாக்டீரியா இருக்காது. ஆனா, பக்கத்துல உள்ள மலக்குடல்ல எப்போதும் பாக்டீரியா இருக்கும். அங்கருந்தும், மற்ற அந்தரங்க உறுப்புகள்லேருந்தும் பாக்டீரியா கிளம்பி, சிறுநீர் பாதைல ஏறி வந்து, அதன் விளைவா சிறுநீர் தொற்று வரலாம். 

இப்படி பாக்டீரியா தொற்று ஏற்படாம இருக்க பொதுவா நம்ம உடம்புல சில விஷயங்கள் நடக்கும். ஆனா, சம்பந்தப்பட்டவங்களோட உடம்புல எதிர்ப்பு சக்தி கம்மியா இருந்து, பாக்டீரியா தாக்கம் அதிகரிச்சா, தொற்று உண்டாகும்.ஆண்களைவிட, பெண்களுக்கே இந்த சிறுநீர் தொற்றுப் பிரச்னை அதிகமா இருக்கு. சில ஆண் குழந்தைகளுக்கு அபூர்வமா சிறுநீர் பைக்குக் கீழே ஒரு வால்வ் இருக்கும். 

அப்படியிருந்தா, சிறுநீர் வெளியேறாது. அதே மாதிரி சில பெண் குழந்தைகளுக்கு ரிஃப்ளக்ஸ்சொல்ற பிரச்னை இருக்கும். அதாவது சாதாரணமா சிறுநீர் பையிலேருந்து வெளியேறும் சிறுநீரானது, மறுபடி திரும்பி, சிறுநீர் பையிலேருந்து, சிறுநீரகத்துக்குப் போகறதாலயும் இந்தத் தொற்று வரலாம். பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு சிறுநீரகக் குழாய்கள்ல அடைப்பு இருந்து, அதுல சிறுநீர் தங்கறதாலயும் தொற்று வரலாம். 

பெரியவங்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட, சிறுநீரகக் கல் காரணமா இருக்கலாம். சிறுநீர் பைக்கு கீழே உள்ள உறுப்பு விரிவடைஞ்சாலும் தொற்று வரும். நீரிழிவு பாதிச்சவங்களுக்கு சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்படற வாய்ப்பு, மத்தவங்களைவிட 3 மடங்கு அதிகம். 5 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்துல சிறுநீர் தொற்று ஏற்படலாம். சரியா கவனிக்கத் தவறினா, குறைப்பிரசவமோ, அபார்ஷனோ ஆகலாம். 

சிறுநீர் கழிக்கிறப்ப லேசா எரிச்சல் வந்தாலே பலரும் உடனே மாத்திரை வாங்கி சாப்பிடறாங்க. அது தவறு. முதல்ல சிறுநீரை கல்ச்சர் டெஸ்ட்டுக்கு கொடுத்து, எந்தக் கிருமி, எந்தளவுக்குத் தாக்கியிருக்குனு கண்டுபிடிக்கணும். பிறகு மருத்துவரோட பரிந்துரைப்படி ஆன்ட்டிபயாடிக் எடுத்துக்கணும். நீரிழிவு இருக்கா, சிறுநீரகங்களோட செயல்பாடு சரியா இருக்கானு பார்க்கணும். 

சிறுநீர்ல ரத்தம் கலந்து வந்தா அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமா சிறுநீர் பாதைல பிரச்னை இருக்கா, கல் இருக்கானு பார்க்கணும். பிரச்சினைக்கேத்தபடிதான் சிகிச்சைகளை எடுக்கணும்’’ என்கிறார். 
-
ஆர்.வைதேகி

சிறுநீரக கோளாறின் எதிரி மசாலா!
மாற்றம் செய்த நேரம்:11/22/2011 10:44:19 AMhttp://www.dinakaran.com/Healthnew/H_image/ht1123.jpg
10:44:19
Tuesday
2011-11-22
*சிறுநீரக செயல் இழப்பு வராமல் தடுக்க அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். வெளியில் சென்றுவிட்டு வரும் போதும், உடற்பயிற்சி முடித்த பின்னரும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் குடிப்பதை தள்ளிப்போடுவது தவறானது. 

*
தேவையற்ற தாதுக்களை உடலில் சேர்க்கும் துரித உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தண்ணீர் குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 1 லிட்டருக்கும் குறைவான நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம்.

*
காய்கறிகளை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிய பின்னர் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மிகச்சிறிய அளவில் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.உப்பையே மறந்து விட்டாலும் நல்லதுதான்.அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை கிராம் உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். மட்டன், சிக்கன்முட்டை போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதில் சேர்க்கப்படும் மசாலா சிறுநீரகப் பழுது உள்ளவர்களுக்கு எதிரி.

*
இதே போல் கெமிக்கல் கலந்த பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்த்து விட வேண்டும். பருப்பு வகைகள் குறைவாக சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகம் பழுதடைவதை தள்ளிப் போடலாம். எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம்.

சிறுநீரக கோளாறா! நீங்க இத படிங்க!
மாற்றம் செய்த நேரம்:11/22/2011 10:36:06 AM
10:36:06
Tuesday
2011-11-22
*மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து பெரும்பான்மையான கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஏதாவது காரணத்தால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டு வேலையை செய்ய முடியாமல் பழுதாகி போனால், உடல் கழிவு நீர் தேங்கிய குட்டை போல் மாறிவிடும். அடுக்கடுக்கான நோய்கள் நம்மைத் தாக்க துவங்கும். இதனால் சிறுநீரகங்கள் பழுதுபடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது:

*
சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கால், முகம், கை மட்டுமில்லாமல் உள் உறுப்புகளான நுரையீரல், இதயம் போன்றவற்றை சுற்றியுள்ள சவ்வுகளிலும் தேங்கத் துவங்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், நடக்க முடியாத நிலை, அமைதியின்மை போன்ற பிரச்னைகள் வரும். 

*
அடுத்து மூளையில் பாதிப்பு, ரத்தத்தில் அதிக உப்பு சேர்வதால் யுரீமிக் கோமாÕ என்ற நினைவிழக்கும் நிலை ஆகியவை ஏற்படும். சிறுநீரகம் பழுதுபட துவங்கியதும் கை, கால் வீக்கம், கட்டுப்படாத உயர் ரத்தஅழுத்தம், மூச்சுவாங்குதல், தலைவலி, உடல் சோர்வுடன் குளிர் காய்ச்சல், சிலருக்கு வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

*
இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். சர்க்கரை நோயாளிகளில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு இந்த பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள நோயாளிகள், வலி நிவாரணி மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், கெமிக்கல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து எடுத்துக் கொள்பவர்கள், குறைவாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்களை சிறுநீரகப் பிரச்னை வெகு எளிதில் தாக்குகிறது.

*
இதற்கு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாத பட்சத்தில் ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் உப்பின் அளவு  7 மில்லி கிராமைவிட அதிகரிக்கும்போது அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. சிறுநீரகம் செயல் இழந்து விட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படாமல் அசுத்தமாக இருக்கும். 

*
தேவையற்ற நீரின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். இந்நிலையில் ரத்தத்தை செயற்கை முறையில் சுத்திகரிக்கும் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒருமுறை டயாலிசிஸ் செய்தால் 2 நாட்கள் மட்டுமே சுத்தமான ரத்தம் நீடிக்கும்.

*
இதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு மாற்று வழியே கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் சிறுநீரகம் கெட்ட பின் மருத்துவம் செய்வதைவிட கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவம் செய்தால் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...
மாற்றம் செய்த நேரம்:9/21/2011 2:40:07 PMhttp://www.dinakaran.com/Healthnew/H_image/ht902.jpg
14:40:07
Wednesday
2011-09-21
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். 

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. 

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. 

மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

 
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரகம் & கேள்வி பதில்கள்
மாற்றம் செய்த நேரம்:10/11/2010 2:41:12 PMhttp://www.dinakaran.com/Healthnew/H_image/ht707.jpg
14:41:12
Monday
2010-10-11
அதிகப் புரதச் சத்து கொண்ட உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டால் அது சிறுநீரகங்களைப் பாதிக்குமா?
'
கொழுப்பு ஆகாது, மாவுச் சத்து அதிகம் வேண்டாம்' என்று பலருக்கும் ஆலோசனை கூறும் டாக்டர்க 'நிறைய புரதச்சத்து இருக்கிற உணவை உட்கொள்ளுங்கள்' என்பார்கள். சீரான உடல் வளர்ச்சிக்குப் புரதச் சத்து மிகவும் தேவை என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் வேறொரு பயமும் பலரிடம் நிலவத் தொடங்கி இருக்கிறது. 'அதிகப் புரதச் சத்துக்கொண்ட உணவுகைளத் தொடர்ந்து உட்கொண்டால், அது சிறுநீரகங்களைப் பாதிக்கும்' என்பதுது£ன் அந்த அச்சம்.இதற்குப் பதில் இதுதான். உணவில் உப்பின் அளவு அதிகமாகிவிட்டால், உடனே ரத்த அழுத்தம் ஏறி விடுவதில்லை. ஆனால் அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்கள், உப்பைத் தவிர்ப்பது நல்லது.
அதிக இனிப்புகள் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்துவிடாது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல, அதிகப் புரதம் அடங்கிய உணவின் காரணமாகச் சிறுநீரகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் சிறுநீரகப் பாதிப்பு உண்டானவர்கள் தங்கள் உணவில் புரதச்சத்து எந்த அளவில் இருக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மருத்துவ ஆலோசனையை கேட்டுக்கொள்வது நல்லது.

ஒருவரின் உடலில் யூரியாவின் அளவு அதிகமாக இருந்தால், அவருக்குச் சிறுநீரகப் பாதிப்பு இருக்கிறது என்று முடிவெடுக்கலாமா?
கூடாது. வயதானவர்களின் ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாக இருந்து அதனால் எந்தத் தீவிர விளைவும் ஏற்படாமல் இருக்கலாம். அதாவது சிறுநீரகங்களுக்கும் வயதாகிவிட்டால் அவற்றின் திறமை குறைந்துவிட்டன என்று பொருள்.

ஒரு சிறுநீரகம் கெட்டுப் போயிருந்தால் அதை நீக்கிவிடுவார்களா?
ஆம் இதை நெஃப்ரக்டமி  என்று அழைப்பார்கள். பிற சிகிச்சைகளால் பலனின்றி ஒரு சிறுநீரகத்தை நீக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஒரு சிறுநீரகமே போதும் எனும்போது, கெட்டுப்போன ஒரு சிறுநீரகத்தை எதற்காக நீக்க வேண்டும்?
விபத்து ஒன்றில் ஒரு சிறுநீரகம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அதை டாக்டர் நீக்கலாம் என டாக்டர் முடிவு எடுக்கக்கூடும். தொடர்ந்து ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்துவதற்காகக்கூட சிறுநீரகத்தை நீக்க நேரலாம்.
சிறுநீரகத்தில் கட்டிகள் ஏற்பட்டாலும் அந்தச் சிறுநீரகத்தை நீக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இல்லையென்றால் அந்தக் கட்டி பரவ வாய்ப்பு நேரலாம் என்பதால் இந்த முடிவு.

நெஃப்ரடிஸ் என்றால் என்ன?
பாக்டீரியாவால் எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறதோ அது வீங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சிறுநீரகத்தில் பாக்டீரியா தோன்றி அதனால் வீக்கம் உண்டாவதைத்தான் நெஃப்ரடிஸ் என்கிறார்கள். காய்ச்சல், சிறுநீரகப் பகுதியில் வலி, சிறுநீர் போகும் போது எரிச்சல் ஆகியவை சில அறிகுறிகள். நிறைய திரவங்களை உட்கொள்வது, ஆன்டிசெப்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவை சில சிகிச்சைகள்.

சிலவகை கீரை, பாகற்காய் போன்றவை சர்க்கரை நோயைக் கட்டப்படுத்துவதால் சிறுநீரகங்களுக்கு நன்மை செய்கின்றன இல்லையா?
இதற்கு ஆதாரம் இல்லை. இவற்றினால் உருவான மருந்துகளை உட்கொண்டால், சிறுநீர் சோதனையில் சர்க்கரை அளவு சில சமயம் குறைவது உண்டு. ஆனால் ரத்தச்சோதனையில், இந்த மருந்துகால், எந்த ஆக்கபூர்வமான மாறுதல்களும் உண்டாவதில்லை. சர்க்கரை நோயைப் பொறுத்தவரை சிறுநீரைவிட ரத்தப்பரிசோதனைகள்தான் அதிகம் ஏற்கத்தக்கவை.

சிறுநீரகங்கள் சுருங்கிவிட்டால், அவற்றை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவரமுடியுமா?
முடியாது என்பதுதான் இப்போதைய நிலை.

ஒருவரிடமிருந்து ஒரு கிட்னியை முழுவதுமாகத்தான் தானம் பெற முடியுமா? அல்லது பாதிக்கிட்னியைக்கூடப் பொருத்த முடியுமா?
மேலோட்டமாகப் படித்தால் இந்தக் கேள்வி சிலருக்குச் சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் சமீபத்தில் ருமேனியா நாட்டில் இப்படி சிறுநீரகத்தின் ஒரு பகுதியைப் பொருத்தி இருக்கிறார்கள்.மூன்று வயதுச் சிறுவன் ஒருவனின் சிறுநீரகம் போதிய அளவில் செயல்படாமல் இருக்க, அவனது அம்மாவின் சிறுநீரகத்தின் ஒரு பகுதி அவனுக்குப் பொருத்தப்பட்டது. டாக்டர் மிஹாய் லூக்கன் என்பவர் தலைமையில்  நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சைக்கு, ஆறு மணிநேரம் ஆனதாம். இதன் தொடர்பான மருத்துவ மேல் விவரங்கள் இந்த நிமிடம் வரை வெளிவரவில்லை.சிறுநீர் போகும் பழக்கத்தில் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டால அது கவனிக்கத்தக்கதா?வழக்கத்தைவிட அதிகமாகத் திரவங்களைக் குடிக்கும்போது, சிறுநீர் கழிக்கும் பழக்கம் வித்தியாசப்படலாம். அப்படி எந்த மாறுதலும் இல்லாதபோது, சிறுநீரிலோ சிறுநீர் கழிக்கும் பழக்கத்திலோ மாறுதல்கள் உண்டானால் அது ஏதோ ஒருவித நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு.
அப்படியானால் உடனடியாக டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டுமா?மாறுதல் என்பது பலவிதங்களில் ஏற்படலாம். வழக்கத்தை விட அதிக தடவை சிறுநீர் கழிக்கலாம். சிறுநீர் கழிக்கும் நேரம் மிகவும் அதிகமாகலாம். சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன் குறையலாம். சிறுநீரின் வண்ணம் மாறலாம். சிறுநீரின் அளவு குறையலாம். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படலாம்.

இந்த மாறுதல்கள் தொடர்ந்து இரு நாட்களுக்கு மேல் இருந்தால், டாக்டரின் ஆலோசனை பெறுவதுதான் நல்லது.

சிறுநீர் கழிக்கும்போது, வலி எக்கச்சக்கமாக இருந்தாலோ.வழக்கத்தைவிட வெகு நேரம் ஆகியும் சிறுநீர் கழிக்க வில்லை என்றாலோ,சிறுநீரில் ரத்தமும் கலந்திருந்தாலோ,சிறுநீரகத்தில் மிகவும் நிறம் மாறியோ, கலங்கலாகவோ தோற்றமளித்தாலே,
உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

சிறுநீரிலோ, சிறுநீர் பழக்கத்திலோ மாறுதல்கள் எதனால் ஏற்படவேண்டும்?
சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்ப் பாதை, புராஸ்டேட் சுரப்பி ஆகிய எதிலாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால், இந்த மாறுதல்கள்  ஏற்படக்கூடும்.இதுபோன்ற மாறுதல்கள், எந்தப் பாகத்தின் பாதிப்பினால் ஏற்பட்டது என்பதயும் ஓரளவு கூறிவிட முடியும்.வழக்கத்தைவிட அடிக்கடி சிறுநீர் கழித்தால், சிறுநீரகங்களிலோ, சிறுநீர்ப்பையிலோ, சிறுநீர்க்குழாயிலோ ஏதாவது வீக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. சர்க்கரை நோய் காரணமாகவும் இந்த நிலை ஏற்படலாம். ரத்தத்தில் கால்சியத்தின்அளவு அதிகமானாலோ, புராஸ்டேட் சுரப்பியினாலோகூட ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம்.சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? டாய்லெட்டுக்குச் சென்றாலும் நீங்கள் நினைக்கும் நேரத்தில் சிறுநீர் வெளியேறத் தொடங்கவில்லையா? புராஸ்டேட் சுரப்பி வீங்கி இருக்க வாய்ப்புண்டு.வழக்கத்தைவிட மிகவும் அதிகமாகச் சிறுநீர் வெளியேறினால், அந்த நிலையை பாலியூரியா என்பார்கள். இது சிறுநீரக நோய் அல்லது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்பு அதிகம்.

சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டு, சிறுநீர்க் குழாயில் எரிச்சல் உணர்வும் ஏற்பட்டால் அது சிறுநீர்ப் பாதையில் தொற்றுக்கிருமிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளன என்பதற்கு அடையாளம்.சிறுநீர் கழிக்கும்போது, வயிற்றின் கீழ்ப்பகுதியில் கடும் வலி ஏற்பட்டால், அது சிறுநீரகக் கல் தோன்றி இருப்பதை உணர்த்துவதாக இருக்கலாம்.

சிறுநீரகம் பாதிக்கப்ட்டவர்கள் தவிர்க்க வேண்டிய முதல் உணவுப் பொருள் எது?
உப்புதான். சிறுநீரகம் பழுதடைந்தது தெரிய வந்தவுடன் தினசரி உணவில் உப்பை மிகவும் குறைக்க வேண்டும் என்பதை டாக்டர் வலியுறுத்துவார். சோடியம் என்பது சமையல் உப்பின் மறுபெயர்.

'
சோடியம் குறைக்கப்பட்ட உணவு முறை' என்பது ஒரு புறம் இருக்க, சோடியம் அற்ற உப்பு  என்று விற்கிறதே, அதை சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ளலாமா?இந்த உப்பில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். டாக்டரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த வகை உப்பைப் பயன்படுத்த வேண்டும்.

சோடியம் குறைவான உணவு வகைகள் சிறுநீரகங்களுக்கு நல்லது என்றால் அப்படிப்பட்ட உணவு வகைகள் எவை?
காய்கறிகளில் காலிஃபிளவர், பீட்ரூட், முள்ளங்கி, கேரட், அகல அவரை, கொத்துமல்லி, பருப்புக்கீரை, பசலைக் கீரை மற்றும் பால், தயிர், முழுப் பயறுகள், தனியா, சீரகம்.

அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உடலில் சேரும் சோடியத்தைக் குறைக்க வேண்டியுள்ளது. இதை எப்படிச் செய்யலாம்?
ஊறுகாய் வேண்டாம்.டின்னில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
கேக், பிஸ்கட் வேண்டாம்(இவற்றில் பேக்கிங் பவுடர், சமையல் சோடா போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள்)அப்பளம், வடா, சிப்ஸுக்குத் தடா.
பாட்டிலில் விற்க்கப்படும் ஜூஸ் வகைகளுக்கும் நோ.
(
மீன்) உலர்த்தப்பட்டு விற்கப்படுபவற்றைத் தவிர்த்து விடலாம்.

சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மாற்று மருத்துவ முறைகளால் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டா?
அலோபதி மருந்துகளாலும்கூட சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். சில வகை வலிப்பு நோய் மருந்துகள், வலி நிவராணிகள், புற்றுநோய்க்கான சில மருந்துகள் ஆகியவற்றாலும்கூட சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ஆனால் அலோபதியில் எந்த மருந்து உடலில் எந்த விளைவை ஏற்படுத்தும் என்பது பற்றிய தெளிவு உண்டு. ஆனால் மாற்று மருத்துவ முறைகளில் இப்படி இல்லை.

மாற்று மருத்துவ முறைகளில் நீண்ட நாள்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று, இத்துறையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக, மாற்றுமருத்துவர்களிடையே போலிகள் பரவ இருக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே, கவனம் தேவை.

சிறுநீர் எப்போதுமே வடிகட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், எப்போது நமக்கு அதை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது?
சிறுநீர்ப்பையைச் சுற்றி உள்ள ஒரு தசை அது வெளியேறாமல் தடுக்கிறது. இந்தப் பையில் சுமார் பாதியளவுக்குச் சிறுநீர் நிறைந்தவுடன், அதை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு உடலுக்கு ஏற்படுகிறது. இந்தச் சமயத்தில் மேற்கூறிய தசையும் தன்னைத் தளர்வு படுத்திக்கொள்ள, சிறுநீர் இறக்குக் குழாய்  வழியாக, வெளியேறுகிறது. இந்தக் குழாய், பெண்களைப் பொறுத்தவரை ஒன்றரை இன்ச் நீளம் கொண்டதாக இருக்கிறது.

ஆண்களைப் பொறுத்தவரை இந்தக் குழாய் ஆண்குறி வழியாகச் செல்கிறது. இந்தக் குழாயின் நீளம் அப்போது சுமார் எட்டு இன்ச். ஆண்களுக்குச் சிறுநீர், விந்து ஆகிய இரண்டுமே இந்தக் குழாயின் வழியாகத்தான் வெளியேகின்றன. உடலுறவின்போது, விந்துவும் அதற்குரிய திரவமும் வெளியேறும்போது, சிறுநீர்ப்பையை விட்டு வெளியேற முடியாதபடி சிறுநீர் தடை செய்யப்படுகிறது.

புராஸ்டேட் வீக்கம்
மாற்றம் செய்த நேரம்:9/24/2010 10:40:54 AMhttp://www.dinakaran.com/Healthnew/H_image/ht685.jpg
10:40:54
Friday
2010-09-24
'அம்மா, என் பிட்யூட்டரி சுரப்பி எங்கே இருக்கிறது?' என்று இளவரசி கேட்டபோது, அறிவியல் ஞானம் கொண்ட அவள் அம்மா  'மூளைக்கடியில்' என்றாள்.
இளவரசி அதோடு விடவில்லை. 'புராஸ்டேட் சுரப்பினு சொல்றாங்களே, அது என் உடம்பிலே எங்கே இருக்கு?' என்று கேட்டாள்.அம்மா சிரித்தாள். 'உன் உடம்பிலே புராஸ்டேட் சுரப்பி கிடையாது' என்றாள்.உடனே தன் உடலில் ஏதோகுறைபாடு என நினைத்து இளவரசியின் முகம் இருண்டு போக, அம்மா அவசர அவசரமாக விளக்கத் தொடங்கினாள்.

'
உனக்கு மட்டுமில்லை. அது என் உடம்பிலும் கிடையாது. ஆண்களின் உடலில் மட்டும்தான் புராஸ்டேட் சுரப்பி உண்டு' என்றாள். நல்லவேளையாக இளவரசி அத்துடன்  பேச்சை நிறுத்தி விட்டு விளையாடச் சென்றுவிட்டாள். புராஸ்டேட் சுரபபியின் வேலை என்ன என்பதுபோல் அவள் ஏதாவது கேட்டிருந்தால், அம்மாவுக்கு லேசான சங்கடம் தோன்றி இருக்கலாம்.

சிறுநீர்ப் பைக்குக் கீழே இருக்கிறது புராஸ்டேட் சுரப்பி, அதாவது சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாயைச் சுற்றி காணப்படுகிறது இந்தச் சுரப்பி. கருவிலேயே உருவாகிவிடுகிறது புராஸ்டேட் சுரப்பி. இருபது வயதாகும் வரை அது வளர்கிறது. அதற்குப் பிறகு, அதன் வளர்ச்சி நின்றுவிட்டாலும் இயக்கம் சீராகத் தொடர்கிறது.
இந்த புராஸ்டேட் சுரப்பியின் வேலைதான் என்ன? ஆணின் உடலிலிருந்து உருவாகும் விந்துக்கள் ஒருவித திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும். அந்தத் திரவத்தை உருவாக்குவதுதான் புராஸ்டேட் சுரப்பியின் முக்கிய வேலை.இந்தத் திரவம் காரணமாகத்தான் விந்துக்களால் மிதந்து பெண்முட்டையை அடைய முடிகிறது. அது மட்டுமல்ல, அப்படி நுழையும்போது, பெண்ணுறுப்புப் பாதையிலுள்ள அமிலத்தன்மையையும் இந்தத் திரவம் குறைக்கிறது. இதன் காரணமாகக் கரு உருவாவது எளிதாகிறது.
சுமார் ஐந்து வயதாகும் வரையில் புராஸ்டேட் சுரப்பி மேற்படி திரவத்தை உருவாக்குகிறது. அதற்குப் பிறகு இது மிகவும் குறையலாம். அல்லது நின்றுவிடலாம். இந்தக் காலகட்டத்தில் புராஸ்டேட் சுரப்பி வீங்கத் தொடங்குகிறது. (எல்லா ஆண்களுக்கும் 50 வது வயதில் கூட இப்படி வீங்கலாம். அல்லது ஒருவரது ஆயுள் முழுவதும் அது வீங்காமலேயே போகலாம்.) உடலில் உண்டாகும் ஹார்மோன் மாறுதல்களால்தான், இந்த வீக்கம் உண்டாகிறது.

இந்த வீக்கத்தால் என்ன பாதகம் என்றால், அது இதுதான். சுரப்பி வீங்கினாலும் அதைச் சுற்றியுள்ள திசுக்கள் அதற்கேற்றாற்போல் விரிவடைவதில்லை. எனவே, உள்பக்கம் அழுத்தம் அதிகமாகிறது. இதன் காரணமாக, சிறுநீர் வெளியேறும் பாதையை இந்தச் சுரப்பி அழுத்துகிறது. இதனால் சிறுநீரின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. மிகவும் அழுத்தும்போது, சிறுநீர் வராமலேயே நின்றுபோகலாம்.சிறுநீர்ப் பையில் கொஞ்சம் சிறுநீர் சேர்ந்தவுடனேயே அது சுருங்கிவிடலாம். இதனால் சிறுநீர் கழிக்கவேண்டும்மென்ற உணர்வு அடிக்கடி ஏற்படும். 

அந்த உணர்வு தோன்றி டாய்லெட்டுக்குச் சென்றால், விரைவில் சிறுநீர் வெளியேறாமல் ஆட்டம் காட்டலாம். சிறுநீர் கழித்த பிறகும் அதை முழுமையாகக் கழித்த உணர்வு இல்லாமல் போகலாம்.
புராஸ்டேட் சுரப்பி வீக்கமடையும் ஆரம்பக் கட்டத்திலேயே இதையெல்லாம் கவனிக்கவில்லை. என்றால், பெரிய பாதிப்புகள் உண்டாகும். சிறுநீரில் ரத்தம், சிறுநீர்ப் பையில் கல், ஏன் முற்றிய நிலையில் சிறுநீர்கச் செயலிழப்புகூட உண்டாகலாம்.என்றாலும் புராஸ்டேட் சுரப்பி வீங்காதபோதும் வேறு சில காரணங்களினால் சிறுநீர் வெளியேறாமல் சிறுநீர்ப் பையிலேயே தங்கிவிடலாம். அடிக்க ஜலதோஷ மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் அலர்ஜிக்கான மருந்துகளைச் சாப்பிடுவதும் கூட இதற்குக் காரணமாகலாம். (இந்த வகை மருந்துகளிலுள்ள ஒரு ரசாயனம், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவதைத் தடுக்கிறது.) மதுப் பழக்கம், குளுமையான சூழல், வெகுநேரம் அசையாமல் இருத்தல் ஆகியவை கூட இதற்குக் காரணமாக அமையலாம்.

புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் கண்டுபிடிக்க, சிறுநீர்ப் பாதையை எக்ஸ்ரே எடுக்கச் சொல்வதுண்டு. பி.எப்.ஏ சோதனை என்ற ஒன்றும் உண்டு.வீக்கத்தை எப்படி நீக்குவது? மேலும் வீங்காமல் தடுக்க சிலவகை மருந்துகள் உள்ளன. ஆசனவாய் வழியே ஒரு கருவியை விட்டுச் சுரப்பியின் வீக்கத்தில் உள்ள படிமங்களை வெளியே எடுப்பதுண்டு. வயிற்றைத் திறந்து செய்யப்படும் அறுவைச் சிகிச்சையின் மூலமாக இதை முற்றிலுமாகக் குணப்படுத்தமுடியும்.

இப்படி அறுவைச் சிகிச்சை செய்யும்போது, சுரப்பியின் உள்ளே இருக்கும் திசுக்களைக் கொஞ்சம் எடுத்து பயாப்ஸி சோதனைக்கு அனுப்புவார்கள். புராஸ்டேட் புற்றுநோய் உண்டாகாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளத்தான் இது.புராஸ்டேட் சுரப்பு கொஞ்சம் வீங்கத் தொடங்கியிருக்கிறது என்றால் சம்பந்தப்பட்டவர் தன் வாழ்க்கையில் சில மாறுதல்களைச் செய்து கொள்ளவேண்டியிருக்கும்.
காபி குடிப்பதை மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது தவிர்க்கவேண்டும்.இரவு ஏழு மணிக்கு மேல் திரவம் எதையும் உட்கொள்ள வேண்டாம்.எந்த உடல்நலக் கோளாறுக்கும் நீங்களாவே மாத்திரைகளை விழுங்கக்கூடாது.மதுப்பழக்கம் கூடாது.
வெதுவெதுப்பான பகுதிகளில் இருப்பது நல்லது. அதாவது ஏ.சி. சூழலைக் குறைக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர்ப்பை முழுவதுமாகக் காலியாகும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரகத்தின் எதிரிகள்
மாற்றம் செய்த நேரம்:9/25/2010 9:49:14 AMhttp://www.dinakaran.com/Healthnew/H_image/ht687.jpg
09:49:14
Saturday
2010-09-25
ஒரு திரைப்படத்தில் 'அவர் ஒரு நேர்மையான..' என்று ஒருவர் தொடங்க, மற்றவர் 'போலீஸ் அதிகாரியா?' என்பார். 'ஏன் நேர்மையான என்றால் அதுபோலீஸ் அதிகாரியாகத்தான் இருக்கணுமா?' என்று முதலாமவர் பதிலுக்குக் கேட்பார்.இப்படித்தான் பல விஷயங்கள் படிந்துவிடுகின்றன. 'அவனுக்காக நான் போகாத கோயில் இல்லை' என்றால், அடுத்த வாக்கியம் 'வேண்டாத தெய்வம் இல்லை'யாகத்தான் இருக்கும்.
தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம் என்றாலும் முக்கியக் காரணம், போனஸ் பிரச்னையாக இருக்க வாய்ப்பு அதிகம்.

அப்படித்தான் பல்வேறு காரணங்களினால் சிறுநீரகங்களில் பிரச்னைகள் தோன்றலாம், அது வேலைநிறுத்தம் வரை சென்றுவிடலாம் என்றாலும் முக்கியக் காரணம் உயர்ரத்த அழுத்தமாக இருக்கும்.
மற்றொரு முக்கியக் காரணம் சர்க்கரைநோய்.
கருவில் உண்டான பிரச்னைகளால் சிலருக்குப் பிறவியிலேயே சிறுநீரக நோய்கள் உருவாகிவிடும். இதை நீஷீஸீரீமீஸீவீtணீறீ ளீவீபீஸீமீஹ் பீவீsமீணீsமீs என்பார்கள். வேறு சிலருக்கு மரபணுவின் காரணமாக, அதாவது முன்னோர்களின் 'அருட்கொடை'யாக சிறுநீரக நோய்கள் தோன்றும். இதை  என்பார்கள். மூன்றாவது 'வந்து சேர்ந்த சிறுநீரக நோய்கள்'. அதாவது 
இந்த மூன்றாவது வகையின் கீழ் வருகிற நீண்டகால சிறுநீரக நோய்க்கு  முக்கியக் காரணங்களாகத்தான் அதிக ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அமைகின்றன.

ஏன், எப்படி என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக ரத்த அழுத்தம் 120/80 என்கிற அளவில் இருந்தால் அதை நார்மல் என்பார்கள். இதில்  120 என்பது 'சிஸ்டோலிக் ரத்த அழுத்தம்'. அதாவது இதயம் முழுவதுமாகச் சுருங்கும்போது, உண்டாகும் ரத்த அழுத்தம்.80 என்பது 'டயஸ்டோலிக் ரத்த அழுத்தம்'. அதாவது இதயம் முழுவதுமாக விரிவடையும்போது, உண்டாகும் ரத்த அழுத்தம்.நம் உணர்வுகளுக்கும், உணவுக்கும் தகுந்தமாதிரி அவ்வப்போது ரத்த அழுத்தம் கொஞ்சம் ஏறலாம். இறங்கலாம். தப்பில்லை. ஆனால் பொதுவாகவே ரத்த அழுத்தம் அதிகமானால் அது கவலைக்குரிய விஷயம்தான்.ரத்த அழுத்தம் அதிகமாவதற்குப் பல காரணங்கள். கொழுப்புச் சக்தி அதிகம் உள்ள உணவு வகைகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் இப்படி ஆகலாம். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, ரத்தக் குழாயின் உள் பக்கத்தில் படிந்துவிடுகிறது. இதனால் ரத்தக் குழாயின் உள்பக்கம் சிறுத்துவிடுகிறது. பாதை குறுகலாகிவிட்டாலும் அதே அளவு ரத்தம் அங்கு பாய வேண்டுமென்றால், அதிக அழுத்தம் அதற்குத் தேவைப்படும் இல்லையா?உணவில் அதிக உப்பைச் சேர்ப்பதாலும் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். ரத்தத்தில் உள்ள தண்ணீரை உப்பில் உள்ள சோடியம் இழுத்துக் கொள்கிறது. இதனால் ரத்தத்தின் அளவும், ரத்த அழுத்தத்தின் அளவும் அதிகமாகின்றன.மன  அழுத்தம் காரணமாகவும் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உண்டு.

ரத்தக் குழாய்கள் குறுகலாகி விடுவதால், அவற்றில் செல்லும் ரத்த அளவு குறைந்துவிடும். முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், மூளை போன்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த அளவு குறையும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.கடுமையான உயர் ரத்த அழுத்தம் குறுகிய காலத்திலேயே சிறுநீரகங்களைப் பாதிக்கும். மிதமான உயர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி, தொடர்ந்து பல வருடங்களாக சிறுநீரகங்களைப் பாதித்து மோசமான இழப்பினை நாம் உணராமலேயே உண்டாக்கிவிடும். அதனாலேயே உயர் ரத்த அழுத்ததினை ஒரு மௌனமான உயிர்க் கொல்லி  என்கிறார்கள்.
சிறுநீரகங்கள் ரத்த அழுத்தத்தினைச் சீர்செய்யும் ரெனின்  என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன என்று குறிப்பிட்டோம். சிறுநீரகம் பாதிக்கப்படும்போது. இந்த ஹார்மோன் சுரப்பதிலும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு ரத்த அழுத்தம் மேலும் சீரின்றிப் போகலாம். இதனால் சிறுநீரகங்களுக்கு மேலும் பாதிப்பு.எனவே, சிறுநீரகங்களை மனத்தில் கொண்டும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதித்து சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகக்கும். மாரடைப்பு, ரத்த நாளங்கள் வெடித்தல் போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கும். கண்ணில் உள்ள ரத்த நாளங்களைச் சிதைத்து, கண் பார்வை இழப்பும் நேரலாம்.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை எப்படி அறிவது?
 
ரத்த, சிறுநீர் சோதனைகள், சிறுநீரகங்கள்  பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதனைத் தெரிவிக்கும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கச் சிறுநீரில் புரதம் இருப்பது தான் முக்கியமான அறிகுறி.
ரத்தத்தில் உள்ள கிரியாட்டினைன்  அளவு, சிறுநீரகங்களால் கழிவுப் பொருள்கள் போதுமான அளவு வெளியேற்றப்படுகிறதா என்பதனைக் காட்டும்.
உங்களுக்குக் கால்களில் வீக்கம், காரணம்  சொல்லமுடியாத சோர்வு, பலவீனம், தினசரி பழக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில் சிரமம், பசியின்மை, குமட்டல் ஆகியவை தொடர்ந்து இருந்தால், கட்டாயமாக மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இப்போது சிறுநீரக நோய்களின் இன்னொரு காரணமான சர்க்கரை நோயைப் பார்ப்போம்.
விளையாட்டு வீரர்களுக்கு அடிக்கடி பரிந்துரைக்கப்படும் ஓர் உணவுப் பொருள் குளுக்கோஸ். சேர்ந்த உடலுக்கு உடனடியாகச் சக்தி தரும் விஷயம் இது.ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அப்படியே உடலுக்குத் தேவைப்படும் சத்தாக மாறிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சிலருக்கு இப்படி நடப்பதில்லை. ஏன்?ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நம் உடலிலுள்ள திசுக்கள் அப்படியே உறிஞ்சி விடுவதில்லை. நம் கணையத்தில் சில திசுக்கள் உள்ளன. 'ஐலெட்ஸ் ஆஃப் லங்கர்ஹான்ஸ்எனப்படும் இந்தத் திசுக்கள். இன்சுலின் என்ற சுரப்பியைச் சுரக்கின்றன. இந்தச் சுரப்பிதான் குளுக்கோஸை, திசுக்கள் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுகிறது.

துரதிர்ஷ்டவசமாகச் சிலருக்கு இன்சுலின், தேவையைவிடக் குறைவாகச் சுரக்கலாம். அப்போது என்ன ஆகும்? ரத்தத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் தங்கிவிடும் ( அவை திசுக்களால் உறிஞ்சிக்கொள்ளும் விதத்தில் இல்லாதவை) அதேசமயம் தேவைக்குக் குறைவான அளவே திசுக்களால் குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் உடலில்  சோர்வு, களைப்பு.இது ஒரு பக்கமிருக்க, இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் சிறுநீரகங்களுக்கு வேலை அதிகமாகிறது. அதிக அளவ குளுக்கோஸை வடிகட்ட வேண்டியிருக்கிறதே!அளவுக்கு மேல் பாரம் ஏற்றினால், அது மயிலிறகாக இருந்தாலும் வண்டியின் அச்சாணி முறிந்துவிடுமல்லவா? அதுபோல, எல்லை தாண்டி குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து விடுவதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது.சர்க்கரைநோய் பல வருடங்களுக்குக் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மற்ற பாகங்களைவிட கண்களும் சிறுநீரகங்களும் அதிகம் பாதிப்படைகின்றன. இதற்குக் காரணம், அவற்றில்தான் நிறைய ரத்தக்குழாய்கள் உள்ளன. தவிர, அவை மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வேறு.
நம் சிறுநீரகங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சக்தி உண்டு. பகலில் அதிகமாக வடிகட்டும் பணியைச் செய்யும் இவை, இரவில் குறைவாகவே இந்த வே¬யைச் செய்கின்றன. இல்லையென்றால் என்னவாகும்? இரவில் பலமுறை நாம் எழுதந்திருக்க வேண்டி வரும். அதனால்தான்  இயற்கை, சிறுநீரகங்களை இப்படிச் செயல்பட வைத்திருக்கிறது
.
ஆனால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக ஆக, சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. அதிகப்படியான குளுக்கோஸ் விஷமாக மாறி, அங்கு நெஃப்ரான்களைப் பாதிக்கிறது. இதைத் தொடர்ந்து சிறுநீரகத்தின் வடிகட்டும் பணியிலும் மாறுதல் ஏற்படுகிறது. காலக்கட்டுப்பாட்டோடு இயங்குவதைச் சிறுநீரகம் மாற்றிக்கொள்கிறது. இதனால்தான் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர் இரவில் பலமுறை சிறுநீர் கழிக்கிறார்.சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என்பதன் மூலம் அறிகுறி சிறுநீரில், மிகவும் சிறிய அளவிலான ஆல்பியுமின் என்ற புரதச்சத்து வெளியேறுவது£ன். இந்தக் கட்டத்திலேயே இதை அறிந்துக்கொண்டு, சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பைச் சரி செய்யமுடியும். இல்லையென்றால் சிறுநீரில் உப்பு அதிகமாகக் கலந்து, நாளடைவில் கைகால் வீக்கம் என்று தொடங்கி சிறுநீரகச் செயலிழப்பில் முடியலாம்.

அடுத்தடுத்து உடனடியாக இவை நேர்ந்துவிடுமா? நல்லவேளையாக இல்லை.புரதச் சத்துக்களை இழக்கத் தொடங்கி சில வருடங்கள் (சுமார் எட்டு வருடங்கள்) தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருக்கவிட்டால், சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பு மிக அதிகம்.இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது செயல்திறனை இழக்கும் சிறுநீரகம், நாளடைவில் தனது வடிகட்டும் திறனை மொத்தமாகவே இழந்துவிடலாம். (அப்போது உடலுக்குத் தேவையான, புரதம் உள்ளிட்ட, பல சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் சேரும் சத்துக்கள், சிறுநீர் வழியாக வெளியேறிவிடுவதால்தான், அவர்கள் மிகவும் இளைத்துவிடுவார்கள்.)சர்க்கரைநோயைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், சிறுநீரகப் பாதிப்புகளையும் கணிசமாகக் குறைக்கலாம். பாதிப்பு நேர்ந்தபின் சிறுநீரகங்களைச் சரிசெய்வது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்.நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான  முக்கியக் காரணங்கள், சர்க்கரை நோயும் அதிக ரத்த அழுத்தமும் என்பதைப் பார்த்தோம். இதே காரணங்கத்£ன். கண்களின் பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும்கூட முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.

எனவே உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டும் இருந்தால், உங்கள் பார்வை மிகுந்த ரிஸ்கில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த இரண்டு காரணிகளையும்  உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.