எதிலும்
நல்லதை நினைத்தால் மரணமும் எட்டி ஓடும்
நல்லதைப் பேசுங்கள், நல்லதையே செய்யுங்கள்
‘எப்பொழுதும் நல்லதை எண்ணுங்கள்.
நல்லதைப் பேசுங்கள்.
நல்லதையே
செய்யுங்கள்.
வாழ்வில்
அவநம்பிக்கை கொள்ளாதீகள்.
எதையும்
நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.
மறை எண்ணங்கள் வேண்டாமே.
நல்லதை நினைத்தால்,
வாழ்வை நம்பிக்கையோடு எதிர் கொண்டால்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
நீடித்த வாழ்வு கிட்டும்.’
வாழ்வை நம்பிக்கையோடு எதிர் கொண்டால்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
நீடித்த வாழ்வு கிட்டும்.’
இவ்வாறு சொல்லாத
அறிஞர் அல்லது ஞானிகள் இருக்க முடியாது.
ஆனால் எவர் எதைச்
சொன்னாலும், எத்தனை தடவைகள் இத்தகைய நல்ல வார்த்தைகளைக் கேட்டாலும் எமது
குரங்கு மனம் அடங்குவதில்லை. மறை எண்ணம் கொண்டு கவலையுறவே செய்யும்.
ஆனால் விஞ்ஞான
ரீதியாகச் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இது வெற்று நம்பிக்கையல்ல, நிரூபிக்கப்படக் கூடிய உண்மையும் கூட
என்ற நம்பிக்கையைத் தருகிறது.
Optimistic women
பெண்களில்
செய்யப்பட்ட இந்த ஆய்வானது அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்ற நம்பிக்கை உணர்வு
கொண்ட பெண்களுக்கு (Optimistic women) மாரடைப்பு வருவதற்கான சாத்தியமும், வேறு காரணங்களால் மரணம் வருவதற்குமான
வாய்ப்பும் குறைவு என்கிறது.
மாறாக நடப்பவை
எதிலும் நம்பிக்கையற்று, மற்றவர்களில் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொள்ளும் (pessimistic women) பெண்களுக்கு மரணம் விரைவில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
Pessimistic Women
இருந்தபோதும்
அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பில் மாற்றம் இருக்கவில்லை என மேலும்
சொல்கிறது அந்த ஆய்வு.
மாதவிடாய் முற்றாக
நின்றுவிட்ட 50 வயது முதல் 79 வயதுவரையான 97,253 பெண்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலமே இந்த முடிவுகள் எட்டப்பட்டன.
மற்றவர்களோடு
ஒப்பிட்டுப் பார்க்கையில் நம்பிக்கையுணர்வுள்ள பெண்களில் மாரடைப்பு வருவதற்கான
வாய்ப்பு 9 சதவிகிதத்தாலும்,
ஏனைய காரணங்களால் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 14 சதவிகிதத்தாலும் குறைந்திருந்தது.
ஆனால் நம்பிக்கை
வரட்சி கொண்ட பெண்களில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 16 சதவிகிதத்தால் அதிகரித்திருந்தது.
நம்பிக்கை
உணர்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பில் இனத்திற்கும் (Race) பங்கு உண்டாம்.
நம்பிக்கையுணர்வுள்ள ஆப்பிரிக்க அமெரிக்க பெண்கள் அடுத்த 8 வருடங்களில் மரணிப்பதற்கான வாய்ப்பு 33 சதவிகிதம் குறைவாக இருந்ததாம். ஆனால்
அதே கால இடைவெளியில் வெள்ளையினப் பெண்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு 13 சதவிகிதம் மட்டுமே குறைவாக இருந்ததது.
பொதுவாக நம்பிக்கை
உணர்வு கொண்டவர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல்
அளவு, மனச் சோர்வு அறிகுறிகள் போன்றவை குறைவாகவே இருப்பதுண்டு.
அத்துடன் புகைத்தல், மற்றும் உடலுழைப்பின்றி சோம்பேறி
வாழ்க்கை வாழ்தல் ஆகியவையும் அதிகம் காணப்படுவதில்லை.
இவற்றைக் கணக்கில்
எடுத்த போதும், நம்பிக்கை உணர்வுள்ளவர்களிடையே மாரடைப்பு மற்றும் விரைவில் மரணம்
அடைதல் ஆகியன குறைவாகவே இருந்தததாக ஆய்வு செய்தவர்கள் தெளிவுபடுத்தினர்.
இது பெண்களுக்கான
ஆய்வுதானே என்று எண்ண வேண்டாம்.
சில வருடங்களுக்கு
முன் ஆண்களில் டச் மருத்துவர்களால் செய்யப்பட்ட ஆய்வும் இதே முடிவையே கொண்டிருந்தன
என்பது குறிபிடத்தக்கது.
ஓப்பிட்டு
ரீதியாகப் பார்க்கும் போது
வயதில்
குறைந்தவர்கள்,
கல்வியறிவு
அதிகமுள்ளவர்கள்,
பொருளாதார ரீதியாக
வசதியுள்ளவர்கள்,
சமய நிகழ்வுகளில்
வாரம் ஒரு முறையாவது கலந்து கொள்பவர்களிடையே நம்பிக்கை உணர்வு அதிகம் இருந்ததையும்
இந்த ஆய்வில் கண்டறிந்தார்கள்.
எனவே எமது வாழ்நாளை
அதிகரிப்பதற்கு வாழ்விலும் எதிர்காலத்திலும் நம்பிக்கை உணர்வை வளர்ப்பது
அவசியமாகிறது.
நீண்ட நாள்
வாழ்வதற்காக மட்டுமின்றி மகிழ்ச்சியுள்ள பயனுறு வாழ்வாக அமைவதற்கும் அதே நம்பிக்கை
உணர்வுதானே காரணமாகிறது.
அழு மூஞ்சியை கழுவித் துடைத்து
எறிந்து விட்டு நம்பிக்கையோடு புன்னகைக்கும் வதனமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
அது சரி. கீழே உள்ளவரின்
நம்பிக்கையும் நேர் எண்ணத்தில் (Positive
Thinking) அடங்குகிறது அல்லவா?
இவர்களை எந்த இடத்தில் சேர்த்துக்
கொள்வது?
தகவல்:- Journal of the American Heart Association யின் ‘Circulation’ | நன்றி:- ஹாய் நலமா / தினக்குரல்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home