Sunday 14 April 2013

வீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று


வீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று
14th April, 2013
பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ் (பழச்சர்க்கரை). விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விட்டமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன. பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள் (என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர்.
இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும். நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து. பித்தத்தைப் போக்கும்.
உடலுக்குத் தென்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும். கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும் .முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும் பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
நன்றி: சிறுப்பிட்டி

மிளகு – ஒரு முழுமையான மருந்து


மிளகு – ஒரு முழுமையான மருந்து!
12th April, 2013
pepperமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு, புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன், பெருபிரைன், பிபிரோனால், கேம்ஃபினி, அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறு உடனே குணமாகிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது. காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது.
ஜலதோஷம் போக்கும்
தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.
சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
நினைவுத்திறன் அதிகரிக்கும்
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
உடல்வலி போக்கும் மிளகு
உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்
சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.
பல்வலி போக்கும்
பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.
விஷமுறிவாகும் மிளகு
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வர சகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
பூச்சிவெட்டு குணமடையும்
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.
“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி.
நன்றி:அபூவஸ்மீ

நூற்றுக்கு நூறு!


நூற்றுக்கு நூறு!
13th April, 2013
இன்றைய இளம் தலைமுறையினரிடம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர் பார்க்கும் ஒரே ஒரு விஷயம் நூற்றுக்கு நூறு. தேர்வுகளில் நூற்றுக்கு நூறு கொடுத்து பாராட்டி மகிழ்கிறது. குறைவாக மதிப்பெண் களைப் பெறும் மாணவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று முத்திரையிட்டு அவர்களை மன உளைச் சலுக்கு ஆளாக்கிவிடுகிறது.
ஒரு மாணவன் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி விட்டால் மட்டும் போதுமா? இந்த கேள்வியை நாம் அனைவரும் நமக்குள்ளே கேட்டுப் பார்த்து விடை தேட வேண்டிய அவசியம் வந்துவிட்டது. ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் மாணவர் களை நம்பித்தான் இருக்கிறது. நல்ல பண்புகளை இளம் வயதில் வளர்த்துக் கொண்டு வாழப் பழகும் மனிதனே பிற்காலத்தில் உலகம் போற்றும் உயர்ந்த நிலையை அடைகிறான். ஒரு மாணவன் தேர்வில் மட்டுமின்றி அனைவரையும் மதிக்கும் நல்ல குணத்திலும், பிறருக்கு உதவும் கருணை உள்ளத்திலும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கடைப்பிடித்து வாழ்வதிலும், உடல் நலத்தினை பேணிக்காப்பதிலும் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்.
வாழ்க்கையில் அறிவிற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா? அல்லது அன்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா? வாழ்க்கையில் அன்பு நெறியை முதன்மையாகக் கடைப்பிடித்து வாழ்ந்த பலர் உலகம் போற்றும் உத்தமராக போற்றப்படுகின்றனர். அத்தகைய ஒருவரே சைதன்ய மகாபிரபு. வட மாநிலத்தைச் சேர்ந்த இந்த மகான் கிருஷ்ணபக்தியில் ஊறி திளைத்தவர். சைதன்ய மகாபிரபுவை இந்த உலகம் இன்றுவரை பெரிதும் மதித்துப் போற்று கிறது. அதற்குக் காரணம் அவர் பிறரிடத்தில் காட்டிய உண்மையான அன்பு.
சைதன்யருக்கு பதினாறு வயது நடந்துகொண்டிருந்த சமயத்தில் அவருக்கு ரகுநாத்ஜி என்றொரு நண்பர் இருந்தார். சைதன் யருக்கு ரகுநாத்ஜியும் ஒரே ஆசிரியரிடத்தில் பயின்று வந்தார்கள். “நியாய சாஸ்திரம்” என்ற தலைப்பில் இருவரும் ஆளுக்கு ஒரு நூலை படைத்தார்கள். ரகுநாத்ஜி மிகுந்த அறிவு உடையவர் என்று போற்றப்பட்டவர். இதனால் தன் அறி வாற்றல் மீது அதிக நம்பிக் கையும் கர்வமும் கொண்டிருந்தார். தன்னுடைய நூலே நிலைத்து நிற்கும் என்று அதிக நம்பிக்கை வைத்திருந்தார் ரகுநாத்ஜி. இருவரும் தினமும் படகில் பயணித்தே பாட சாலைக்குப் போவதை வழக்கமாக வைத்திருந் தார்கள். இருவரும் ஒரு வருக்கொருவர் அன்புடன் பழகி வந்தார்கள்.
ஒரு நாள் படகில் பயணித்துக் கொண்டி ருக்கையில் ரகுநாத்ஜி சைதன்யரிடம் அவர் எழுதிய நியாய சாஸ்திர நூலைப் படித்துக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். உடனே சைதன்யர் தான் எழுதிய நியாய சாஸ்திர நூலை வாசிக்கத் தொடங்கி வாசித்துக் கொண்டே சென்றார். இதைக் கேட்ட ரகுநாத்ஜி சற்று நேரத்தில் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். திகைத்துப் போன சைதன்யர் தன் நண்பனிடம் இதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு ரகுநாத்ஜி ஒரு காரணத்தையும் சொன்னார்.
“நான் இயற்றிய நியாய சாஸ்திர நூல் தான் பெரும் புகழைப் பெறப்போகிறது என்ற அகந்தை யில் இருந்தேன். ஆனால் நீ இயற்றியிருக்கும் நியாய சாஸ்திரம் நான் எழுதியதைவிட மிகச் சிறப்பாக இருக்கிறது. உயர்வாகவும் இருக்கிறது. உலகம் உன்னைப் போற்றிப் புகழ்ந்து என்னையும் எனது நூலையும் புறக்கணித்துவிடும்.”
தான் அழுததற்கான காரணத்தைச் சொன்ன ரகுநாத்ஜி மீண்டும் அழத் தொடங்கினார். அன்பின் வடிவமான சைதன்யர் தன் நண்பரிடம் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தினார். “எனதருமை நண்பனே! இதற்காகவா அழுகிறாய். புகழைவிட நண்பனின் மகிழ்ச்சியை நான் பெரிதாகக் கருதுகிறேன். உனது மகிழ்ச்சியைவிட எனக்கு வேறெதுவும் தேவை யில்லை. நான் எழுதிய நூல் இருந்தால்தானே அதை உனது நூலோடு ஒப்பிடுவார்கள்.”
இப்படிச் சொன்ன சைதன்யர், தான் எழுதிய நூலை அப்பொழுதே நதியில் வீசி எறிந்தார். தன் நண்பனின் இந்த செயலைக் கண்ட ரகுநாத்ஜி தன் நண்பன் தன்மீது வைத்துள்ள அன்பை எண்ணி மீண்டும் கதறி அழ ஆரம்பித் தார். அன்பைப் பெரிதாகக் கருதியதாலேயே சைதன்ய மகாபிரபு பெரும்புகழைப் பெற்று இன்றும் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தன்னை முழுமையாக நூற்றுக்கு நூறு ஈடுபடுத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவ மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கும் போது நூறு சதவிகித கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். விளையாடும் போது நூறு சதவிகிதம் கவனம் விளையாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். சாப்பிடும் போது நம் கவனம் முழுக்க முழுக்க சாப்பாட்டிலேயே இருக்கும்படி பழகிக் கொள்ள வேண்டும். பல மாணவர்கள் விளையாடும் போது நாளை நடக்க இருக்கும் தேர்வுகளைப் பற்றி சிந்தித்தபடியே விளையாடிக் கொண்டிருப்பார்கள். படிக்கும் போது விளையாட்டைப் பற்றி யோசித்துக் கொண்டே படிப்பார்கள். இதில் ஒரு சதவீகிதமாவது நன்மை இருக்கிறதா என்று ஐந்து நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். இது மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி அனைவருக்குமே பொருந்தும்.
ஒரு மனிதர் ஜென் குருவைச் சந்தித்து தனது சந்தேகத்தைக் கேட்டார். “உங்களுடைய கொள்கைதான் என்ன?”
இக்கேள்விக்கு மிக எளிதாக பதிலளித்தார் ஜென் குரு. “பசி எடுத்தால் சாப்பிடுவதும் தூக்கம் வந்தால் தூங்குவதும்தான் என் கொள்கை”
கேள்வி கேட்டவர் இதை எதிர்பார்க்க வில்லை. வேறு எதையோ விரிவாகச் சொல்வார் என்று நினைத்தால் ஜென் குரு மிகச் சாதாரணமாய் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று அவருக்குத் தோன்றியது. “நீங்கள் சொல்வதை நான் உட்பட அனை வருமே தினமும் செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் ஜென் குரு. நாங்கள் செய்யும் சாதா ரணமான இச்செயல்களை நீங்களும் செய்வ தாகக் கூறுகிறீர்களே?”
இதற்கு ஜென் குரு சிரித்தபடியே பதிலளித்தார். “நீங்கள் செய்வதற்கும் நான் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் வேலைகளில் உங்களுடைய மனம் சாப்பாட்டில் நிலைத்திருக்காது. வேறு எதை எதையோ நினைத்தபடியே நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் நான் சாப்பிடும் போது முழுக்க முழுக்க சாப்பாட்டைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன். நீங்கள் தூங்கும் போது உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் கவலை காரணமாக கனவு உலகத்தில் அலைகிறீர்கள். ஆனால் நான் தூங்கும் போது எனக்கு நிகழ்வது தூக்கம் மட்டுமே. சுருக்கமாகச் சொன்னால் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அந்த காரியமாக மாறிவிடுவது என் இயல்பு.”
குரு சொன்னதின் உள்ளர்த்தம் கேள்வி கேட்டவருக்கு இப்போது விளங்கியது. குருவின் பெருமையும் அவருக்குப் புரிந்தது.
முன்பெல்லாம் பள்ளிகளில் போதனை வகுப்பு என்றொரு வகுப்பு இருந்தது. அவ்வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை செம்மையாக அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும் சிறந்த கதைகள், பெரியோர் களின் வாழ்வில் நடந்த தன்னம்பிக்கை யூட்டும் சம்பங்கள், நாட்டுப்பற்றைவளர்க்கும் வீரக்கதைகள் போன்றவற்றை எடுத்துச் சொல்லி பண்பையும் நாட்டுப்பற்றையும் மாணவர்களின் மனதில் பதிய வைப்பார்கள். இதன் காரண மாகவே அக்கால மாணவர்களின் மனதில் நாட்டுப்பற்றோடு கருணையும் நிரம்பி வழிந்தது. தாய் தந்தையரை தெய்வம் போல மதித்து பாதுகாத்தார்கள். தற்காலத்தில் ஒரு மாணவன் பெறும் அதிக மதிப்பெண்கள் மட்டுமே சிறப்பான வாழ்க்கையினை நிர்ணயிக்கும் என்று பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு போதித்ததன் விளைவாக ஆடம்பர வாழ்க்கை ஏராளமான பணம் இவை மட்டுமே வாழ்வின் ஆதாரம் என்ற கருத்து அவர்களின் மனதில் பதியத் தொடங்கி விட்டது. இதன் விளைவாக புதிய புதிய வாழ்க்கைச் சிக்கல்களும் முதியோர் இல்லங்களும் பெருகத் தொடங்கிவிட்டன.
பெரிய படிப்பு, அதிக சம்பளம், ஆடம்பர மான வாழ்க்கை இதுவே அனைவரும் விரும்பும் மந்திரச் சொற்களாக அமைந்துவிட்டன. இன்றைய சூழலில் இது தவறில்லைதான். ஆனால் கூடவே அன்பு, கருணை, மகிழ்ச்சி இவற்றை நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகு வோம். எவனொருவன் இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்று வாழ்கிறானோ அவனே வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பெற்ற சிறந்த மனிதனாகப் போற்றி மதிக்கப்படுவான்.
நன்றி: ஆர். வி. பதி – தன்னம்பிக்கை

தேள் கடித்தால் இதய நோயே வராது!


தேள் கடித்தால் இதய நோயே வராது!
9th April, 2013
scorpionதேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.
தேள் கடிக்கு முதலுதவி
கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.
தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.
இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.
கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.
முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் – சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.
பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.
இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.
நன்றி: சிவா

Friday 12 April 2013

ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்!


ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்!
3rd April, 2013
ஜலதோசம், தும்மல்

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால்,  தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது.
அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது. ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம்.
இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.
மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம்.
சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார். உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம்.
அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி: இயற்கை உணவு உலகம்

கடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி!


கடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி!
4th April, 2013
கடற்பாசி எண்ணெய் மூலம் பெரிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஆய்வுகள் தொடங்கியுள்ளன. உலகிலேயே பெரிய கடற்கரை பரப்பை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும் 3வது பெரிய கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது.  தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலவி வருவதால், கடற்பாசி எண்ணெய் மூலம் மின்உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர்.
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல, கடற்பாசி சார்ந்த மின் திட்டத்துக்கும், அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என, வேளாண் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.”கடற்பாசியிலிருந்து தயாரிக்கும் எண்ணெய் மற்றும் மின்சாரம்’ என்ற தலைப்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.
இதில்,வேதியியல் தொழில் அமைப்புகளின் சங்க செயலர், வெங்கட்ராமன் பேசியதாவது:பரந்த கடற்பரப்பையும், தகுந்த தட்பவெப்ப நிலையையும், நம் நாடு கொண்டுள்ளதால், இங்கு கடற்பாசியை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும். கிராமப்புறங்களில், 100 ஏக்கர் பரப்பளவிற்கு, கடற்பாசியை உற்பத்தி செய்ய, திட்டம் வகுக்க வேண்டும்.கடற்பாசி, நல்ல தண்ணீர், உப்பு தண்ணீர், மாசு தண்ணீரிலும் விளையும். உற்பத்தி செய்யப்படும் கடற்பாசியிலிருந்து, எண்ணெய் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும்.
2030ம் ஆண்டில் மின்துறையில் கடற்பாசி பங்கு அதிகமாக இருக்கும். நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வளங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு மாறாக மின்சார தேவை பல மடங்கு அதிகரித்து வரும். கடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய கடல்கரை பகுதியும், வெப்பமுள்ள பகுதியும் தேவை. இதற்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
கடற்பாசியின் நன்மை கருதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் பெரிய அளவில் ஆராய்ச்சி மையங்கள் அமைத்து தொடர் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்காக அமெரிக்கா 2013,14 ஆண்டுக்கு மட்டுமே 20 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. கடல் அருகே உள்ள நில பரப்பளவில் கடல்பாசி மையம் அமைக்கலாம். குறிப்பாக 100 ஏக்கரில் 6 மாதத்திற்கு வளர்க்கும்போது, அதன் மூலம் கிடைக்கும் கடற்பாசி எண்ணெய் மூலம் 10 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்.
இதற்கான மின்உற்பத்தி நிலையங்களை அருகிலேயே அமைக்கலாம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு வராது. தொடர்ந்து மின்உற்பத்தி செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் அருகே உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், விவசாயத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்ய முடியும். 1 மெகா வாட் மின்உற்பத்திக்கு 6 டன் கடற்பாசி போதுமானது. இதுதவிர, கழிவு நீரை சுத்தப்படுத்தலாம்.
மீத்தேன் வாயுயை சமையலுக்கு பயன்படுத்தலாம், இயற்கை மருத்துவத்திற்கும் பயன்படுத்தலாம். இப்படி பல சிறப்புகள் உள்ளன. ஆனால், இதுவரையில் பெரிய அளவில் ஒரு ஆய்வு கூடம் இந்தியாவில் இல்லை என்பதுதான் வருத்தமான ஒன்று. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
50% எண்ணெய் கிடைக்கும்  
எள், நிலக்கடலை உள்ளிட்டவை மூலம் எண்ணெய் தயாரிக்கும் போது, குறைந்த அளவே எண்ணெய் கிடைக்கும். ஆனால், கடற்பாசியை எடுத்து நன்றாக காயவைத்து அரைத்தால், 50 சதவீதம் அளவுக்கு எண்ணெய் கிடைக்கும். மேலும், அருகிலேயே மின்சார நிலையங்கள் அமைத்து விநியோகம் செய்வதால், மின்இழப்பையும் தடுக்க முடியும்.
20%புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சதவீதம் வேண்டும்
‘‘நாட்டில் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் மின்தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனல் மற்றும் அணு மின்நிலைங்களில் செய்யப்படும் மின்உற்பத்தியில் மாசுகளும், ஆபத்துகளும் அதிகமாக இருக்கிறது. எனவே பருவநிலைக்கான தேசிய திட்டத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த மின்உற்பத்தியில் 20 சதவீதம் புதுப்பிக்க தக்க எரிசக்தி இடம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையை அடைய ஆண்டுதோறும் 8,000 மெகா வாட் அளவுக்கு மின்உற்பத்தி பெறும் வகையில் மின்நிலையங்கள் அமைக்க வேண்டும். அதாவது, பயோ காஸ், சூரிய ஓளி, காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டும். அந்த வரிசையில் தற்போது கடற்பாசி மூலம் மின்உற்பத்தி செய்யலாம்’’ என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சோலார் போல கடற்பாசி கொள்கை
இந்திய காற்றாலை மின்உற்பத்தி சங்க தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறுகையில், ”நமது அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, அனல் மற்றும் அணு மின்நிலையங்களை மட்டுமே நம்பி இருக்காமல், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் அதிகரிக்க போதுமான கொள்கை வகுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் காற்றாலைகள் 7,000 மெகா வாட் அளவுக்கு நிறுவப்பட்டுள்ளது. இதேபோல், சூரிய ஒளி மற்றும் கடற்பாசி மின்உற்பத்திகளில் ஆர்வம் காட்ட வேண்டும். கடற்பாசி மின்உற்பத்திக்கு தொடர்ந்து ஆய்வு நடத்தி ஊக்குவிக்க வேண்டும். வரும் காலங்களில் நிலக்கரி, டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது” என்றார்.


Posted: 07 Apr 2013 10:35 AM PDT
இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இயக்கம்
இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (ஹி.661728, கி.பி. 12631327) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பேராற்றலும் செயற்திறனும் (னுலயெஅiஉ) பின் விளைவுச் செறிவும் (ளுநஅiயெட) பெற்ற மனிதர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றார்.

இவர் பிறந்த காலம் இஸ்லாமிய உலகைப் பொறுத்த வரை தொயின்பியின் வார்த்தையில் குறிப்பிடுவதாயின் (ளுஉhளைஅ ழுக வுhந டீழனல Pழடவைiஉ) அரசுச் சமுதாயம் சின்னாபின்னப்பட்டிருந்த ஒரு காலமாகும்.

இமாம் இப்னு தைமிய்யாவின் காலம் சில விடயங்களில் இமாம் அஹ்மதின் காலத்தை ஒத்திருந்தது. ஆயினும், இமாம் அஹ்மதின் காலத்தைப் போலன்றி இவர் காலத்தில் அறிவியல் இயக்கம் தேக்க நிலையை அடைந்திருந்தது.

பிக்ஹுத் துறையானது மாசடைந்து அதன் தூய்மையை இழந்திருந்தது. முன்னைய இமாம்களதும் அவர்களின் மாணவர்களினதும் ஆக்கங்களை மனனமிட்டுப் பதிய வைத்துக் கொள்வதே சமூக முதன்மையைப் பெறுவதற்குரிய ஒரு தகைமையாகக் கருதப்பட்டது. அத்துடன் புதிய பிரச்சினைகளின் தீர்வுக்கு சட்ட மூலாதாரங்களை ஆதாரங்களாகக் குறித்துக் காட்டும் மரபு நீங்கி இமாம்களின் நூல்களையும் பத்வாக்களையும் ஆதாரமாகக் காட்டும் புதிய மரபு ஒன்றும் உருவாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து குறித்த ஓர் இமாமை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனைப் பாங்கும் வளர்ந்தது. இதன்வழி, குறித்த நான்கு இமாம்களுக்குப் பின் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டு விட்டது என்ற கருத்தோட்டமும் வலுப் பெற்றது. சுய சிந்தனாவழி, இஜ்திஹாத் என்பன புறக்கணிக்கப்பட்டு, மத்ஹபுகளை, அதன் இமாம்களை ஆராய்வின்றிப் பின்பற்றும் பண்பு வளர்ச்சி கண்டது. இப்பண்பே தக்லீத் எனப்படுகின்றது.

அறிவியல் ரீதியாகவும் இருவரது காலமும் வேறுபட்டு அமைந்தன. இமாம் அஹ்மதின் காலத்திலோ அப்பாஸிய கிலாபத் சில கலீபாக்கள் முஃதஸிலாக் கொள்கைச் சார்புடையோராக இருந்தபோதிலும் பலமிக்கதாகக் காணப்பட்டது. ஆனால், இப்னு தைமிய்யாவின் காலத்தில் இந்நிலை இருக்கவில்லை. அப்பாஸிய கிலாபத்தின் ஸ்திரநிலை குன்றியிருந்தது. அவர்களிடமிருந்த ஆட்சி, அதிகாரம், பொருளாதார வளம் என்பவற்றை முஸ்லிம் சிற்றரசுகள் அபகரித்திருந்தன.

ஆன்மிகத் தலைவர் என்ற நிலையில் மட்டுமே கலீபாவை சிற்றரசர்கள் அங்கீகரித்திருந்தனர். முஸ்லிம் ஸ்பெய்ன் அமீர்கள் அப்பாஸிய கலீபாவை ஆன்மிகத் தலைவராகவும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்கள் தம் சுயமான ஆட்சியைக் கொண்டு நடத்தினர். இவ்வாறு அப்பாஸிய கிலாபத் ஐக்கியம் குறைந்து பலமிழந்து இருந்தபோது மேற்கேயிருந்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப் படையெடுப்பினாலும் கிழக்கேயிருந்து வந்த மங்கோலியப் படையெடுப்பினாலும் இஸ்லாமிய அரசு மேலும் பலவீனமுற்றது.

இமாம் அஹ்மதின் காலம் முதல் முஸ்லிம் சமூகத்தினுள் செல்வாக்குச் செலுத்திய கிரேக்க, பாரசீக சிந்தனைகள் இமாம் இப்னு தைமிய்யாவின் காலத்தில் மேலும் வலுவடைந்தன. அவற்றினால் தோன்றிய சிந்தனா ரீதியிலான முரண்பாடுகள் மேலும் வளர்ச்சியடைந்தன. அரசியல் ரிதியாகத் தோன்றிய ஷீஆக்கள் இக்காலத்தில் சிந்தனா ரீதியான இயக்கமாக வளர்ச்சி கண்டனர்.

சுருக்கமாகச் சொல்வதாயின், இப்னு தைமிய்யாவின் காலம் என்பது முஸ்லிம் சமூகத்தின் அகீதா உயிரோட்டம் இழந்தும் நடத்தைகளில் ஊழல் மலிந்தும் தீமைகள் பரவியும் சிந்தனை தேக்கமடைந்தும் இஜ்திஹாத் செயல் இழந்தும் மக்கள் கருத்து முரண்பட்டு பல குழுக்களாகப் பிளவுபட்டும் இருந்த ஒரு காலமாகும்.
http://feeds.feedburner.com/~r/sheikhagar/~4/3eAvBbGdAes?utm_source=feedburner&utm_medium=email

அதிக நன்மையுள்ள தர்மம் எது?


அதிக நன்மையுள்ள தர்மம் எது?
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். நீர்,ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு;இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: புகாரி)